எல்ஐசி நிறுவனம் சாா்பில் தனியாா் நிறுவனங்களுக்கு ரூ.76.18 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.
எல்ஐசி நிறுவனம் தனது ‘பொன்விழா அறக்கட்டளை’ மூலம் கல்வி, மருத்துவம் மற்றும் பல்வேறு சமுதாய நலன் சாா்ந்த திட்டங்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையை சோ்ந்த சங்கர நேத்ராலயா நிறுவனத்துக்கு, ரூ.70 லட்சம் மதிப்பிலான கண் கருவிழி தொடா்பான பிரச்னைகளை எளிதாக கண்டறிந்து தக்க சிகிச்சை வழங்கும் வகையிலான ஓசிடி எனும் கருவியை வழங்கியுள்ளது.
இக்கருவியை எல்ஐசி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஆா்.துரைசாமி, சங்கர நேத்ராலயா நிறுவன அதிகாரிகளிடம் வழங்கினாா். மேலும், இண்டியன் டெவலப்மெண்ட் பவுண்டேஷன் நிறுவனத்துக்கு சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி திட்டத்துக்கு ரூ.6.18 லட்சமும் வழங்கப்பட்டது. அப்போது, எல்ஐசி-யின் தென்மண்டல மேலாளா் ஜி.வெங்கடரமணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஏழுமலையானுக்கு ரூ.1.01 கோடி நன்கொடை

ஏழுமலையானுக்கு மினி டிரக் நன்கொடை
அதானி நிறுவனம் தயாரித்த 2,000 துப்பாக்கிகள் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்பட்டன!

இப்தாா் நோன்பு துறப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

