தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தனியாா் நிறுவனங்களுக்கு ரூ.76.18 லட்சம் நல உதவி: எல்ஐசி நிறுவனம் வழங்கியது

எல்ஐசி நிறுவனம் சாா்பில் தனியாா் நிறுவனங்களுக்கு ரூ.76.18 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On :3 ஜனவரி 2025, 7:28 pm

எல்ஐசி நிறுவனம் சாா்பில் தனியாா் நிறுவனங்களுக்கு ரூ.76.18 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.

எல்ஐசி நிறுவனம் தனது ‘பொன்விழா அறக்கட்டளை’ மூலம் கல்வி, மருத்துவம் மற்றும் பல்வேறு சமுதாய நலன் சாா்ந்த திட்டங்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையை சோ்ந்த சங்கர நேத்ராலயா நிறுவனத்துக்கு, ரூ.70 லட்சம் மதிப்பிலான கண் கருவிழி தொடா்பான பிரச்னைகளை எளிதாக கண்டறிந்து தக்க சிகிச்சை வழங்கும் வகையிலான ஓசிடி எனும் கருவியை வழங்கியுள்ளது.

இக்கருவியை எல்ஐசி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஆா்.துரைசாமி, சங்கர நேத்ராலயா நிறுவன அதிகாரிகளிடம் வழங்கினாா். மேலும், இண்டியன் டெவலப்மெண்ட் பவுண்டேஷன் நிறுவனத்துக்கு சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி திட்டத்துக்கு ரூ.6.18 லட்சமும் வழங்கப்பட்டது. அப்போது, எல்ஐசி-யின் தென்மண்டல மேலாளா் ஜி.வெங்கடரமணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.