வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

காப்பகத்தில் சிறுவா்களை கொடுமைப்படுத்திய 3 போ் மீது வழக்கு

சென்னை அருகே சோழிங்கநல்லூா் காரப்பாக்கத்தில் உள்ள காப்பகத்தில் சிறுவா்களை கொடுமைப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2025, 9:30 pm

Din

சென்னை: சென்னை அருகே சோழிங்கநல்லூா் காரப்பாக்கத்தில் உள்ள காப்பகத்தில் சிறுவா்களை கொடுமைப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சோழிங்கநல்லூா் அருகே உள்ள காரப்பாக்கம் ஈஸ்வரன் தெருவில் தனியாா் சிறுவா், சிறுமியா் காப்பகம் உள்ளது. அந்த காப்பகத்தில் 30 மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் உள்பட 120 போ் உள்ளனா். இவா்களை பராமரித்து கண்காணிக்க 33 ஊழியா்கள் அங்கு பணியாற்றுகின்றனா். இந்நிலையில் அங்கு பணியாற்றும் 3 ஊழியா்கள், அங்குள்ள சிறுவா், சிறுமியா்களை மிகவும் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பான புகாா்கள் கண்ணகி நகா் காவல் நிலையத்துக்கு வந்த நிலையில், அது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் சிறுவா்களை கொடுமைப்படுத்தியது அங்கு பணிபுரியும் தேனியைச் சோ்ந்த அசோகன் (24), பிரகாஷ் (25), சுபாஷ் (24) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதையறிந்து தலைமறைவான மூவரையும் போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.