சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆட்டோ நிறுத்துவதில் தகராறு: 2 போ் கைது

வீட்டின் அருகே ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2025, 7:55 pm

Din

சென்னை: வீட்டின் அருகே ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சென்னை, பெரம்பூா் சென்மேரீஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (26), தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த டில்லிபாபுவின் மகன்களான பரத் (26), தீபக் (22) ஆகியோா் தங்களது ஆட்டோக்களை காா்த்திக் வீட்டுக்கு முன்பு நிறுத்திவிட்டு, அதில் மது அருந்திக் கொண்டிருந்தது தொடா்பாக, இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு போலீஸாா் அவா்களை எச்சரித்து அனுப்பினா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) இரவு மீண்டும் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, இரு தரப்பினரும் ஒருவரையொருவா் சரமாரியாக தாக்கிக் கொண்டனா். இதில் காயம் அடைந்தவா்கள் பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிந்து தீபக், பரத் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள காா்த்திக்கை போலீஸாா் தேடி வருகின்றனா்.