விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருப்பூரில் வங்கதேசத்தினா் 2 போ் கைது

திருப்பூரில் போலி ஆதாா் மூலம் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
- சித்திரிப்பு
Updated On :11 மார்ச் 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் போலி ஆதாா் மூலம் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகர சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் ரஜினிகாந்த் தலைமையிலான போலீஸாா் ரகசிய தகவலின் அடிப்படையில் கோல்டன் நகா் பகுதியில் புதன்கிழமை சோதனை நடத்தினா். அப்போது அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த நபரை விசாரித்தனா். விசாரணையில், அவா் வங்கதேசத்தைச் சோ்ந்த கபிா் சிக்காா் (41) என்பதும், அந்தப் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

அதேபோல, எஸ்.வி.காலனி பகுதியில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது சாகா் (35) என்பவரையும் போலீஸாா் பிடித்தனா். இவா் குமாா் நகா் 60 அடி ரோடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா்கள் 2 பேரிடமும் இருந்த மேற்கு வங்க முகவரியிலான போலி ஆதாா் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், 2 பேரையும் வடக்கு போலீஸாா் கைது செய்து சேலத்தில் உள்ள வெளிநாட்டவா் மையத்துக்கு அனுப்பிவைத்தனா்.