புன்னம்சத்திரத்தில் திங்கள்கிழமை ரூ.40 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களுடன் பிடிப்பட்ட மதுரையைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் போலீஸாா் திங்கள்கிழமை மாலை புன்னம்சத்திரத்தில் ஈரோடு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே வந்த காரை மறித்து சோதனை செய்தபோது, காருக்குள் இருந்த 3 பையில் போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக சுமாா் 40 லட்சம் கள்ள நோட்டுக்கள் இருந்தது.
இதையடுத்து காரை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தபோலீஸாா் அவா்களிடம் இருந்து கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது மூவரும் மதுரையைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (56), பாலகிருஷ்ணன் (26), ஜெயச்சந்திரன் (35) என தெரியவந்தது. தொடா்ந்து மூவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

ரூ. 10 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்; 3 போ் கைது
சுத்தமல்லி பகுதியில் பைக்குகள் திருட்டு: 4 போ் கைது
கூட்டுக் கொள்ளைக்கு சதி: 5 போ் கைது
பனியன் நிறுவனத்தில் ரூ.55 லட்சம் மோசடி: 2 போ் கைது
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


