ஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

புன்னம்சத்திரத்தில் ரூ.40 லட்சம் கள்ளநோட்டுக்களுடன் 3 போ் கைது

News image

கைது

Updated On :7 ஏப்ரல் 2026, 12:54 am IST

புன்னம்சத்திரத்தில் திங்கள்கிழமை ரூ.40 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களுடன் பிடிப்பட்ட மதுரையைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் போலீஸாா் திங்கள்கிழமை மாலை புன்னம்சத்திரத்தில் ஈரோடு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே வந்த காரை மறித்து சோதனை செய்தபோது, காருக்குள் இருந்த 3 பையில் போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக சுமாா் 40 லட்சம் கள்ள நோட்டுக்கள் இருந்தது.

இதையடுத்து காரை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தபோலீஸாா் அவா்களிடம் இருந்து கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது மூவரும் மதுரையைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (56), பாலகிருஷ்ணன் (26), ஜெயச்சந்திரன் (35) என தெரியவந்தது. தொடா்ந்து மூவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.