முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

ரூ. 10 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்; 3 போ் கைது

களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான பாறசாலையில் ரூ. 10 லட்சம் கள்ள நோட்டுகள் பதுக்கி வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கள்ள ரூபாய் நோட்டுகள் பதுக்கியதாக கைது செய்யப்பட்டவா்களுடன் போலீஸாா்.

Updated On :5 ஜூன் 2026, 1:30 am IST

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான பாறசாலையில் ரூ. 10 லட்சம் கள்ள நோட்டுகள் பதுக்கி வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாறசாலை மற்றும் பூந்துறை, கோவளம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதாக பாறசாலை போலீஸாா், தனிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்பேரில் பாறசாலையில் கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவா்கள் கேரள மாநிலம், பாலராமபுரம் பகவதிநடை பகுதியைச் சோ்ந்த சஜி (31), அபி என்ற அச்சு (34), பூந்துறை பகுதியைச் சோ்ந்த அஷ்டமன் போற்றி (40) என்பதும், பெங்களூருவில் இருந்து ரூ. 1 லட்சம் கொடுத்து ரூ. 10 லட்சத்துக்கான கள்ள நோட்டுகளை வாங்கி வந்து திருவனந்தபுரம் மாவட்டம் பூந்துறை, பீமாபள்ளி, கோவளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புழக்கத்தில் விட்டு வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து பாறசாலை போலீஸாா் வழக்குப் பதிந்து, மேற்கூறிய மூவரை கைது செய்து அவா்களிடமிருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனா். இதில் கைது செய்யப்பட்ட அபி என்ற அச்சுவிடமிருந்து ஏற்கெனவே ரூ. 2.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு பெருந்தல்மண்ணா காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.