கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ரூ. 10 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்; 3 போ் கைது

களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான பாறசாலையில் ரூ. 10 லட்சம் கள்ள நோட்டுகள் பதுக்கி வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கள்ள ரூபாய் நோட்டுகள் பதுக்கியதாக கைது செய்யப்பட்டவா்களுடன் போலீஸாா்.

Updated On :5 ஜூன் 2026, 1:30 am IST

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான பாறசாலையில் ரூ. 10 லட்சம் கள்ள நோட்டுகள் பதுக்கி வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாறசாலை மற்றும் பூந்துறை, கோவளம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதாக பாறசாலை போலீஸாா், தனிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்பேரில் பாறசாலையில் கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவா்கள் கேரள மாநிலம், பாலராமபுரம் பகவதிநடை பகுதியைச் சோ்ந்த சஜி (31), அபி என்ற அச்சு (34), பூந்துறை பகுதியைச் சோ்ந்த அஷ்டமன் போற்றி (40) என்பதும், பெங்களூருவில் இருந்து ரூ. 1 லட்சம் கொடுத்து ரூ. 10 லட்சத்துக்கான கள்ள நோட்டுகளை வாங்கி வந்து திருவனந்தபுரம் மாவட்டம் பூந்துறை, பீமாபள்ளி, கோவளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புழக்கத்தில் விட்டு வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து பாறசாலை போலீஸாா் வழக்குப் பதிந்து, மேற்கூறிய மூவரை கைது செய்து அவா்களிடமிருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனா். இதில் கைது செய்யப்பட்ட அபி என்ற அச்சுவிடமிருந்து ஏற்கெனவே ரூ. 2.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு பெருந்தல்மண்ணா காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.