கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டா

கரப்ப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசியுள்ளது பற்றி...

News image

மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா - படம் - பிடிஐ

Updated On :22 ஜூலை 2026, 9:40 pm IST

கரப்ப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராடி வருகின்றனர்.

ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும், நாடாளுமன்றத்தின் நுழைவுவாயில் மூடப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்திய விவகாரத்தில் பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி அவரது இல்லத்துக்கு வெளியே செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை தில்லி காவல்துறை கைது செய்தது.

இதையடுத்து இன்று, வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு தரவுகளுடன் பேசிய ராகுல் காந்தி, “ நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 7.5 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதில் கைதான ஒருவருக்குக் கூட மோடி அரசு தண்டனைப் பெற்றுத் தரவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசியதாவது:

வினாத்தாள் கசிவு உள்பட மாணவர்களால் எழுப்பப்பட்ட பிரச்னைகள் நேர்மையாக கவனிக்கப்பட வேண்டியதே. எனது முதல் வேண்டுகோள் என்னவென்றால், நாம் இந்தப் பிரச்னையை அரசியல்மயமாக்கவோ அல்லது இதன் மூலம் அரசியல் ஆதாயங்களைத் தேடவோ கூடாது. இது ஒரு தீவிரமான பிரச்னை, மேலும் இது ஒரு முழுமையான மற்றும் நேர்மையான விவாதத்துக்கு ஏற்றது.

மேலும், இன்று மாலை 4 மணிக்கு, மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சுமார் 150 தாள் கசிவுகள் குறித்து ஒரு விளக்கக்காட்சியை வழங்கினார். இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது, மேலும் ஒரு பொறுப்பான அரசாங்கம் என்ற முறையில், நாங்கள் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிச்சயமாகப் பதிலளிப்போம். நாங்கள் உண்மைகளை வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கும் நாட்டுக்கும் முன்வைப்போம்.

சிஜேபியுடனான கலந்துரையாடல்கள் சுமுகமான முறையில் நடைபெற்றது. அவர்களின் கருத்துகளை நாங்கள் பொறுமையாகக் கேட்டோம். அவர்கள் தங்களுடைய கருத்துகளை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்தால் நன்றாக இருக்கும் என்று நான் கூறினேன். அவர்களும் அவ்வாறே செய்தனர். நாங்கள் கலந்துரையாடலுக்கு தயாராக இருப்பதாக அவர்களிடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் எப்போது விவாதிக்க விரும்பினாலும், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம்.

சோனம் வாங்சுக் உடல்நிலை குறித்து விசாரித்தோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினோம். அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். இன்று, அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். நாங்கள் அதற்கு பதிலளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Summary

Union Minister J.P. Nadda has stated that the party is ready to hold talks with the Janata Party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.