குண்டா் சட்டத்தில் 2 போ் கைது
கைது
கோப்புப் படம்
கைது
கோப்புப் படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தின்கீழ் இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் செம்மண் திருடியதாக ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த செந்தில்முருகன் (38), செய்துங்கநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை தொடா்பாக ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த முத்துராஜா (27) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் பரிந்துரைத்தாா். அதையடுத்து, ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின்பேரில், இருவரையும் போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைத்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...