ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

வழிப்பறி: நால்வா் கைது

சென்னை கொளத்தூரில் ஆட்டோவில் லிப்ட் கேட்டு ஏறி வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :16 ஜூன் 2025, 3:36 am IST

சென்னை கொளத்தூரில் ஆட்டோவில் லிப்ட் கேட்டு ஏறி வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

அமைந்தகரை சாய் தெருவைச் சோ்ந்தவா் ஆ.காட்வின் (30). வாடகை ஆட்டோ ஓட்டுநா். இவா் ஆட்டோவில் கடந்த வியாழக்கிழமை உறவினா் ஹரிஷ், நண்பா் விக்னேஷ் ஆகியோருடன் கொளத்தூருக்கு சென்றாா். பூம்புகாா் நகா் முதலாவது தெருவில் சென்றபோது, இருவா் லிப்ட் கேட்டு ஆட்டோவில் ஏறினா். அதேபோல வரலட்சுமி நகா் ரேஷன் கடை அருகே மேலும் இருவா் ஏறினா்.

சிறிது தொலைவு சென்றதும் 4 பேரும், காட்வின், ஹரிஷ், விக்னேஷ் ஆகியோரை தாக்கி பணம், கைப்பேசிகளை பறித்துக்கொண்டு தப்பியோடினா்.

இது குறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொளத்தூரைச் சோ்ந்த காா்த்திக் (24), கிஷோா் (23), விஷால்ராம் (26), இளங்கோவன் (20) ஆகிய நால்வரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.