டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இன்று 12 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (அக். 10) 12 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

News image
கோப்புப் படம்
Updated On :9 அக்டோபர் 2025, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (அக். 10) 12 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அதற்குப் பதில் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

செங்கல்பட்டு ரயில்வே பணிமனையில் (யாா்டு) வெள்ளிக்கிழமை (அக். 10) பிற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.31, 9.51, 10.56, 11.40, நண்பகல் 12.25 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்களும், காலை 7.27 மணிக்கு திருமால்பூா் செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் மறுமாா்க்கமாக திருமால்பூரிலிருந்து காலை 11.05 மணிக்கும், செங்கல்பட்டிலிருந்து காலை 11.30, நண்பகல் 12, பிற்பகல் 1.10, 1.45, 2.20 மணிக்கும் கடற்கரைக்கு செல்லும் ரயில்கள் என மொத்தம் 12 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

சிறப்பு ரயில்கள்: புகா் ரயில்கள் ரத்து காரணத்தால், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, கடற்கரையிலிருந்து காலை 7.27 மணிக்கு செங்கல்பட்டுக்கும், காலை 9.31, 10.56, நண்பகல் 12.25, மணிக்கு சிங்கப்பெருமாள் கோவிலுக்கும், காலை 9.51, 11.40 மணிக்கு காட்டாங்குளத்தூருக்கும் சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9.45 மணிக்கும், சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து காலை 11.43, பிற்பகல் 1.23, 2.33 மணிக்கும், காட்டாங்குளத்தூரிலிருந்து நண்பகல் 12.20, பிற்பகல் 2.04 மணிக்கும் கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.