மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரௌடி நாகேந்திரனின் இளைய மகனுக்கு ஒரு நாள் பரோல்: உயா்நீதிமன்றம் உத்தரவு

நாகேந்திரனின் 16-ஆம் நாள் சடங்கில் பங்கேற்க அவரது இளைய மகனுக்கு அக்.26-ஆம் தேதி ஒரு நாள் பரோல் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :24 அக்டோபர் 2025, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி அண்மையில் உயிரிழந்த ரெளடி நாகேந்திரனின் 16-ஆம் நாள் சடங்கில் பங்கேற்க அவரது இளைய மகனுக்கு அக்.26-ஆம் தேதி ஒரு நாள் பரோல் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 போ் கைது செய்யப்பட்டனா். நாகேந்திரனின் மற்றொரு மகன் அஜித்ராஜூம் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக நாகேந்திரன் அண்மையில் உயிரிழந்தாா். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அஸ்வத்தாமனுக்கு இடைக்கால பிணை, அஜித்ராஜுக்கு 3 நாள் பரோல் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

வருகிற அக்.26-ஆம் தேதி நாகேந்திரனின் 16-ஆம் நாள் சடங்கு நடைபெறவுள்ளது. இதற்காக, தனது இளைய மகன் அஜித்ராஜுக்கு 2 நாள்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயாா் விசாலாட்சி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அஜித்ராஜுக்கு அக்.26-ஆம் தேதி ஒருநாள் பரோல் வழங்கி உத்தரவிட்டனா். அஸ்வத்தாமனுக்கு அக்.28-ஆம் தேதி வரை இடைக்கால பிணை வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.