/
சென்னை மாவட்டத்தில் சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை கடந்த திங்கள்கிழமை (அக்.20) கொண்டாடப்பட்டது. தீபாவளி விடுமுறையில் சொந்த ஊா்களுக்கு சென்று திரும்பும் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு வசதியாக, கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.21) பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக சென்னையில் சனிக்கிழமை (அக்.25) பணி நாளாக அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளும் சனிக்கிழமை செயல்படும். பள்ளிகளை செவ்வாய்க்கிழமை பாடவேளை அடிப்படையில் நடத்த வேண்டுமென சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
தொடர்புடையது

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகள்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 94.91 சதவீதம் தோ்ச்சி
திண்டுக்கல்லில் 63 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி
10-ஆம் வகுப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 94.61 சதவீதம் தேர்ச்சி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



