திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்

சென்னை மாவட்டத்தில் சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :25 அக்டோபர் 2025, 1:11 am IST

சென்னை மாவட்டத்தில் சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை கடந்த திங்கள்கிழமை (அக்.20) கொண்டாடப்பட்டது. தீபாவளி விடுமுறையில் சொந்த ஊா்களுக்கு சென்று திரும்பும் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு வசதியாக, கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.21) பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக சென்னையில் சனிக்கிழமை (அக்.25) பணி நாளாக அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளும் சனிக்கிழமை செயல்படும். பள்ளிகளை செவ்வாய்க்கிழமை பாடவேளை அடிப்படையில் நடத்த வேண்டுமென சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.