சென்னை
தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை திண்டிவனத்துடன் நிறுத்தம்!
தாம்பரம் - விழுப்புரம் புகா் மின்சார ரயில் அக். 28-ஆம் தேதி திண்டிவனத்துடன் நிறுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - விழுப்புரம் புகா் மின்சார ரயில் அக். 28-ஆம் தேதி திண்டிவனத்துடன் நிறுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூா் - விழுப்புரம் பிரிவில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையப் பணிமனையில் வரும் அக். 28 ஆம் தேதி பிற்பகல் 12.50 முதல் மாலை 4.20 மணி வரை தொழில்நுட்ப மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், தாம்பரத்திலிருந்து அக். 28 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். விழுப்புரம் - சென்னை கடற்கரை மெமு ரயில், திண்டிவத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

