சென்னையில் 4 நாள்களுக்கு வீடு தேடி ரேஷன்: தமிழக அரசு தகவல்
சென்னையில் தாயுமானவா் திட்டத்தின்கீழ், வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் செப். 13 முதல் 16 வரை நான்கு நாள்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வருதிற செப்.13-ஆம் தேதி தொடங்கி செப்.16-ஆம் தேதி வரையில் சென்னையின் பல்வேறு மண்டலங்களில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
செப்.13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை, மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி,
சோழிங்கநல்லூா் ஆகிய மண்டலங்களிலும், செப்.13-ஆம் முதல் செப்.16-ஆம் தேதி வரை திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணாநகா், ஆலந்தூா் ஆகிய மண்டலங்களிலும் வீடு தேடி சென்று பொருள்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

