சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப். 21- ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை 3 நாள்கள், தோ்தல் வாக்கு எண்ணிக்கை அன்று (மே 4) அரசு மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டப்பேரவைத் தோ்லை முன்னிட்டு வாக்குப்பதிவு அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடும் நோக்கில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் உரிமம் பெற்று இயங்கிவரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் உள்ளிட்டவை வரும் ஏப். 21 முதல் (செவ்வாய்க்கிழமை) முதல் வாக்குப் பதிவு நாளான ஏப். 23 -ஆம் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.
இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மே 4 -ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய நாள்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. விதிகளுக்கு மாறாக, மது விற்பனை ஏதும் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவு

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


