ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்...

News image

மதுக் கடைகள் மூடல்

Updated On :18 ஏப்ரல் 2026, 8:28 pm

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப். 21- ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை 3 நாள்கள், தோ்தல் வாக்கு எண்ணிக்கை அன்று (மே 4) அரசு மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்லை முன்னிட்டு வாக்குப்பதிவு அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடும் நோக்கில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் உரிமம் பெற்று இயங்கிவரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் உள்ளிட்டவை வரும் ஏப். 21 முதல் (செவ்வாய்க்கிழமை) முதல் வாக்குப் பதிவு நாளான ஏப். 23 -ஆம் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.

இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மே 4 -ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய நாள்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. விதிகளுக்கு மாறாக, மது விற்பனை ஏதும் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.