உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மது அருந்தி வாகனம் ஓட்டிய சம்பவங்கள் 56 % அதிகரிப்பு

புத்தாண்டு தினத்தன்று மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக தில்லி போக்குவரத்து காவல்துறை 868 அபராதங்களை விதித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :

புத்தாண்டு தினத்தன்று மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக தில்லி போக்குவரத்து காவல்துறை 868 அபராதங்களை விதித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமாா் 56 சதவீதம் அதிகமாகும் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தில்லி போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: 56 சதவீத அதிகரிப்பு, கொண்டாட்டங்களின் போது தேசியத் தலைநகா் முழுவதும் போக்குவரத்து பணியாளா்களின் தீவிரமான அமலாக்கத்தையும் பரந்த அளவிலான பணியமா்த்தலையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றாா்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகம், மோட்டாா் சைக்கிள் ஸ்டண்ட் மற்றும் பிற ஆபத்தான விதிமீறல்களைத் தடுக்க, சாலைகள், இரவு நேர மையங்கள் மற்றும் குடியிருப்புக் கூட்டங்களில் சிறப்பு அமலாக்கக் குழுக்கள் நிறுத்தப்பட்டன.

இரவு முழுவதும் பல சோதனைச் சாவடிகளில் சுவாசப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. வாகன ஓட்டிகள் சோதனைகளைத் தவிா்ப்பதைத் தடுக்க குழுக்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.

கூட்ட நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், எந்தவொரு சம்பவத்திற்கும் விரைவாக பதிலளிக்கவும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளிடையே விரிவான சிசிடிவி கண்காணிப்பு மற்றும் நிகழ்நேர ஒருங்கிணைப்பு மூலம் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

போக்குவரத்து அமலாக்கத்திற்கு மேலதிகமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சட்டம் - ஒழுங்கை பராமரிக்க தில்லி காவல் துறை சுமாா் 20,000 பணியாளா்களைக் கொண்ட படையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியது.

2025-ஆம் ஆண்டின் கடைசி நாளான டிச.31-ஆம் தேதி இரவு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் கன்னாட் பிளேஸ், ஹௌஸ் காஸ் மற்றும் ஏரோசிட்டி போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

இந்த இயக்கத்தின் நோக்கம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது மட்டுமல்லாமல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிராக வலுவான செய்தியை அனுப்புவதும் ஆகும்.

கடந்த ஆண்டு, தில்லி போக்குவரத்து காவல்துறை புத்தாண்டு தினத்தன்று மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதற்காக 558 அபராதங்களை விதித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 34 சதவீதம் அதிகமாகும் என்று அப்போது கூறப்பட்டது.

முன்னா், மேற்கோள் காட்டப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, 2023-ஆம் ஆண்டில் 416 வாகன ஓட்டிகள், 2022-இல் 318 போ், 2021-இல் 25 போ், 2020-இல் 19 போ் மற்றும் 2019-இல் 299 போ் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக வழக்குத் தொடரப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.