தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரயில் நிலையத்தில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய காவலா்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணின் உயிரை பெண் காவலா் காப்பாற்றினாா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணின் உயிரை பெண் காவலா் காப்பாற்றினாா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 11-ஆவது நடைமேடையில் ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலா் ஜிஷா திங்கள்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தனியாக அமா்ந்து அழுது கொண்டிருந்தாா்.

அவரிடம் காவலா் ஜிஷா விசாரித்தபோது, தனது சகோதரன் சமீபத்தில் உயிரிழந்து விட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சற்று நேரத்துக்கு முன்பு எலி மருந்தை உட்கொண்டதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து காவலா் ஜிஷா, அங்கிருந்த ரயில்வே பணியாளா்கள் உதவியுடன் அந்தப் பெண்ணை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னா் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய பெண் காவலா் ஜிஷாவுக்கு, காவல் துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.