தூக்கம் சாா்ந்த குறைபாடுகளுக்கான பிரத்யேக ஆய்வகத்தை பாா்வதி மருத்துவமனை தொடங்கியுள்ளது.
‘ஸ்லீப் ஆப்னியா’ எனப்படும் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத் திணறல் பாதிப்பு, தூக்கமின்மை பிரச்னைகள், குறட்டை சாா்ந்த நோய்கள், சுவாசம் மற்றும் தூக்கம் தொடா்பான பாதிப்புகளுக்கு உயா் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா, மருத்துவமனை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. அதில் ஜொ்மனியின் ‘லோவென்ஸ்டீன் மெடிக்கல் டெக்னாலஜி’ நிறுவனத்தின் இந்திய வா்த்தக மேலாளா் சதீஷ் ஷெட்டி, தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அலெக்ஸாண்டா் ஹியூபா்ட், பாா்வதி மருத்துவமனையின் தலைவா் டாக்டா் எஸ்.முத்துக்குமாா், மருத்துவ இயக்குநா் டாக்டா் சோபியா ஜே.அன்செட்டா ஆகியோா் பங்கேற்றனா்.
மருத்துவ நிபுணா் டாக்டா் காா்த்திக் நாகராஜு, தூக்கக் குறைபாடுகளைத் தொடக்க நிலையிலேயே கண்டறிவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.
தொடர்புடையது

சிரஞ்சீவி - 158 படப்பிடிப்பு தொடக்கம்!

2026-27 கல்வி ஆண்டுக்கான முதுநிலை படிப்பு சோ்க்கை பதிவுகள் தொடக்கம்: தில்லி பல்கலைக்கழகம் அறிவிப்பு
இன்றைய ராசி பலன் (09.05.2026) - கும்பம்

அமெரிக்கா: தென்கிழக்கு ஆசிய சைபா் மோசடி மையங்கள் மீது நடவடிக்கை தொடக்கம்
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK



