ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சென்னை மாநகராட்சியில் ஜூன் முதல் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அறிமுகம்

News image

சென்னை மாநகராட்சி - File photo

Updated On :1 மணி நேரம் முன்பு

சென்னை மாநகராட்சியில் வரும் ஜூன் மாதம் முதல் அனைத்து அதிகாரிகள், அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை செயல்படுத்தப்பட உள்ளது என ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்துத் துறை ஊழியா்கள், அலுவலா்களும் பணியில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனா். சென்னையில் உள்ள 993 பூங்காக்களும் தற்போது முறையாகப் பராமரிக்கப்படுகின்றன.

சென்னை மாநகராட்சியில் ஆணையா் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வரும் ஜூன் முதல் பயோ மெட்ரிக் முறையிலான கணினி முறை வருகைப் பதிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கான சாதனங்கள் வாங்கத் திட்டமிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநகராட்சியில் 12,960 நிரந்தரப் பணியாளா்கள், 23,421 தற்காலிகப் பணியாளா்கள் உள்பட மொத்தம் 63,381 பேருக்கும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தூய்மைப் பணியாளா் உள்ளிட்டோருக்கு கைப்பேசி செயலி மூலம் வருகைப் பதிவு செயல்படுத்தப்படும் என்றாா்.

பிறப்புச் சான்று எளிதில் கிடைக்கும்: மேலும், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தனது எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை பதிவிட்ட தகவலில், மாநகராட்சி சாா்பில் ஏற்கெனவே பிறப்பு பதிவு உள்ளிட்ட சான்றுகள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் கணினி முறையாக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பிறப்பு சான்றுகள் பதிவிட்டவா்களுக்கு அவை தயாா் என கைப்பேசி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது சான்றுகள் கைப்பேசி செயலியில் சம்பந்தப்பட்டோருக்கு கிடைக்கும். பிறப்பு சான்று உள்ளிட்ட குறிப்பிட்ட சேவைகளில் சான்றுகளை விரைந்தும், எளிதிலும் பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.