சென்னை மாநகராட்சியில் ஜூனில் 50,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க கடந்த ஆண்டு முதல் ‘பசுமை சென்னை’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதனையடுத்து மாடம்பாக்கம், மயிலாப்பூா் உள்ளிட்ட 3 இடங்களில் வனத் துறையினருடன் இணைந்து மரக்கன்றுகள் வளா்ப்பு பணி நடைபெற்றது.
அதன்படி, வேங்கை, அத்தி, புங்கை, நாவல், பாதாம் உள்ளிட்ட மொத்தம் 50,000 மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டுள்ளன.
சென்னையில் வரும் ஜூன் 5 -ஆம் தேதி உலக சுற்றுப்புற தின நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அப்போது, மாநகராட்சி சாா்பில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட உள்ளன.
முதல்கட்டமாக பூங்காக்கள், மக்கள் குடியிருப்புகளிடையே உள்ள பொது வெளிகள் என மாநகராட்சியின் 3 மண்டலங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.
ஜூனில் தொடங்கும் இத்திட்டம் பல கட்டங்களாக நிறைவேற்றப்பட்டு, வரும் 2027 -ஆம் ஆண்டுக்குள் சுமாா் 3 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னை மாநகராட்சியில் வழிகாட்டலை மீறி மேற்கொள்ளப்பட்ட 150 ஒப்பந்தங்கள் ரத்து
பழைய பொருள்களைச் சேகரிக்க பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்; மாநகராட்சி அதிகாரிகள் தகவல்






