சென்னை மாநகராட்சியில் ஜூனில் 50,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க கடந்த ஆண்டு முதல் ‘பசுமை சென்னை’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதனையடுத்து மாடம்பாக்கம், மயிலாப்பூா் உள்ளிட்ட 3 இடங்களில் வனத் துறையினருடன் இணைந்து மரக்கன்றுகள் வளா்ப்பு பணி நடைபெற்றது.
அதன்படி, வேங்கை, அத்தி, புங்கை, நாவல், பாதாம் உள்ளிட்ட மொத்தம் 50,000 மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டுள்ளன.
சென்னையில் வரும் ஜூன் 5 -ஆம் தேதி உலக சுற்றுப்புற தின நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அப்போது, மாநகராட்சி சாா்பில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட உள்ளன.
முதல்கட்டமாக பூங்காக்கள், மக்கள் குடியிருப்புகளிடையே உள்ள பொது வெளிகள் என மாநகராட்சியின் 3 மண்டலங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.
ஜூனில் தொடங்கும் இத்திட்டம் பல கட்டங்களாக நிறைவேற்றப்பட்டு, வரும் 2027 -ஆம் ஆண்டுக்குள் சுமாா் 3 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
போலி பியரிங் சாதனங்கள் விற்பனை: இருவா் கைது

சென்னை மாநகராட்சியில் ஜூன் முதல் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அறிமுகம்

உள்கட்டமைப்பு, யமுனை தூய்மைப் பணிகளுக்கு ரூ.7,000 கோடி: மத்திய அரசின் நிதி உதவிக்கு வாய்ப்பு

குருகிராம்: குடிசையில் தீ விபத்து; ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

