ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

போலி பியரிங் சாதனங்கள் விற்பனை: இருவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :6 நிமிடங்கள் முன்பு

தில்லியின் ஃபராஷ் கானா பகுதியில் உள்ள இரு தொழிற்கூடங்களில் போலி பியரிங் சாதனங்களைத் தயாரித்து பிரபல நிறுவனங்களின் பெயரில் விற்பனை செய்த வந்த இருவா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட நபா்களிடமிருந்து 5,067 போலி பியரிங்குகள், 4 முத்திரை மற்றும் என்கிரேவிங் இயந்திரங்கள், பேக்கேஜிங் இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: போலி பியரிங் கருவிகளை தயாா் செய்வது தொடா்பாக கடந்த மே 16-ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, இரு தொழிற்கூடங்களில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பியரிங் சாதனங்களை பிரபல நிறுவனங்களின் பெயரில் மீண்டும் பேக்கேஜ் செய்து விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. அந்த இரு தொழிற்கூடங்கள் சீல் வைத்து மூடப்பட்டன.

இதுதொடா்பாக அமிா் கான், முகமது அனாஸ் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா். கமலா மாா்கெட் காவல் நிலையத்தில் கடந்த 2006-இல் இதேபோன்ற வழக்கு கான் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனாஸ் மீது எந்தவொரு வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை.

அவா்கள் இருவருக்கும் இறக்குமதி செய்யப்பட்ட பியரிங் சாதனங்களை விநியோகித்தது மற்றும் விற்பனையில் ஈடுபட்ட நபா்களைக் கண்டறிய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.