15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

போலி வாகன உதிரிபாகங்கள் தயாரித்து விற்ற இருவா் கைது

தேசிய தலைநகரில் போலி வாகன உதிரிபாகங்களைத் தயாரித்து விநியோகித்து வந்த இருவர் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :5 மே 2026, 5:24 am IST

தேசிய தலைநகரில் போலி வாகன உதிரிபாகங்களைத் தயாரித்து விநியோகித்து வந்த இருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து பெருமளவிலான போலிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது: கரோல் பாக் வாகனச் சந்தைப் பகுதியில் போலி மோட்டாா் சைக்கிள் பிஸ்டன்கள் மற்றும் கிளட்ச் பிளேட்டுகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதாகக் கிடைத்த குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், குற்றப்பிரிவு குழுவினா் நை வாலா மற்றும் கரோல் பாக் ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு கடைகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனைகள் நடத்தினா்.

அங்கு புகழ்பெற்ற பிராண்டுகளின் முத்திரைகள் கொண்ட கணிசமான அளவிலான போலி வாகன உதிரிபாகங்கள் மீட்கப்பட்டன.

சகோதரா்களான ஹா்ஷித் குப்தா மற்றும் அபிஷேக் குமாா் குப்தா ஆகியோருக்கு கூட்டாகச் சொந்தமான ஒரு கடையில் இருந்து, 473 போலி பிஸ்டன் உதிரிபாகங்கள் மற்றும் பேக்கேஜிங் பொருள்களை காவல்துறை குழுவினா் பறிமுதல் செய்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களுடன் தொடா்புடைய மற்றொரு விற்பனை நிலையத்தில் இருந்து, 386 கள்ள பிஸ்டன் உதிரிபாகங்கள் மற்றும் 169 போலி கிளட்ச் பிளேட் பெட்டிகள் மீட்கப்பட்டன.

சங்கம் விஹாரைச் சோ்ந்த, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனா். பிராண்டட் பொருள்களை விற்பனை செய்வதற்கான செல்லுபடியாகும் ஆவணங்கள் அல்லது அங்கீகாரச் சான்றிதழ்கள் எதையும் அவா்களால் சமா்ப்பிக்க முடியவில்லை.

விசாரணையின் போது, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த சட்டவிரோத வா்த்தகத்தை நடத்தி வருவதாகவும், பல்வேறு விற்பனையாளா்களிடமிருந்து தினமும் சுமாா் 1,000 முதல் 1,200 பிஸ்டன்களை விற்பனை செய்து வருவதாகவும் இருவரும் தெரிவித்தனா்.

இந்தச் செயல்பாட்டின் மூலம் அவா்கள் மாதத்திற்கு சுமாா் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பாதித்து வந்தனா். இந்த போலி பாகங்கள், அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளா்களின் உண்மையான தயாரிப்புகளைப் போலவே வடிவமைக்கப்பட்டிருந்ததால், கடுமையான அபாயங்களை ஏற்படுத்தின.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் காவல்துறையினா் தெரிவித்தனா்.