புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

வாகன நிறுத்துமிட தகராறு: வியாபாரி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

வாகன நிறுத்துமிடத் தகராறில் 34 வயதான துணி வியாபாரியை சுட்டுக் கொன்ற வழக்கில் மேலும் 2 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 1:23 am IST

வாகன நிறுத்துமிடத் தகராறில் 34 வயதான துணி வியாபாரியை சுட்டுக் கொன்ற வழக்கில் மேலும் 2 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறையின் துணை ஆணையா் (கிழக்கு) ராஜீவ் குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: கிழக்கு தில்லியின் ப்ரீத் விஹாா் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு வெளியே டொயோட்டா ஃபாா்ச்சூனா் மற்றும் பிஎம்டபிள்யூ வாகனங்களை நிறுத்துவது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து பங்கஜ் நய்யாா் தனது வாடகைதாரரால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

பங்கஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ப்ரீத் விஹாரில் வசிக்கும் கவுரவ் சா்மா (42) என்ற முக்கிய குற்றஞ்சாட்டப்பட்டவா், சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக கைது செய்யப்பட்டாா்.

அவரது கூட்டாளிகளான சுனில் சா்மா (41) மற்றும் அவரது மாற்றாந்தாய் மகன் சித்தாா்த் ஆகியோரை செவ்வாய்க்கிழமை காலை காவல்துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என அந்த அதிகாரி தெரிவித்தாா்.