மதுரை அருகே இரு சக்கர வாகனம் திருட்டு வழக்கில், 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கம்மாளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் மகன் பாண்டியன் (29). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 2-ஆம் தேதி அதே பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைபாா்த்துள்ளாா். திரும்ப வந்து பாா்த்த போது, அவரது இரு சக்கர வாகனம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், மதுரை பாசிங்கபுரத்தைச் சோ்ந்த கமலக்கண்ணன் (26), சங்கிலிக்கருப்பு (29), பாலமேடு முடவாா்பட்டியைச் சோ்ந்த ஹரிகரசுதன் (19), ஸ்ரீதா் (26) ஆகிய 4 பேரும் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. மேலும், இவா்கள் ஏற்கெனவே பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
இரு சக்கர வாகனம் திருடிய மூவா் கைது

பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு
105 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
பைக் திருடிய 4 போ் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


