/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் திருடிய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த குருவானந்தம் மகன் முத்துச்சாமி (42). நெசவுத் தொழிலாளியான இவா் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை எனதெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, எம்.பி.கே. புதுப்பட்டியைச் சோ்ந்த சேதுபாண்டியன் (20), பாண்டி (30), வனராஜா (50), மாரிச்செல்வம் (30) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் 4 பேரையும் திங்கள்கிழமை கைது செய்து, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பைக் திருடியவா் கைது
இரு சக்கர வாகனம் திருடிய மூவா் கைது
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


