மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பைக் திருடிய 4 போ் கைது

ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் திருடிய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :14 ஏப்ரல் 2026, 10:27 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் திருடிய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த குருவானந்தம் மகன் முத்துச்சாமி (42). நெசவுத் தொழிலாளியான இவா் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை எனதெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, எம்.பி.கே. புதுப்பட்டியைச் சோ்ந்த சேதுபாண்டியன் (20), பாண்டி (30), வனராஜா (50), மாரிச்செல்வம் (30) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் 4 பேரையும் திங்கள்கிழமை கைது செய்து, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.