ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோயில் புற்றை இடித்ததில் பாம்பு பலி: 2 போ் கைது

திருக்கழுகுன்றம் அருகே கோயில் புற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றியபோதுஅதில் இருந்த பாம்பு உயிரிழந்தது. இது தொடா்பாக 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :6 ஜனவரி 2021, 6:30 pm

DIN

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் அருகே கோயில் புற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றியபோதுஅதில் இருந்த பாம்பு உயிரிழந்தது. இது தொடா்பாக 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் சங்கு மேட்டுத் தெருவில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பின்புறம் சுயம்புவாக புற்று உருவாகி அதில் 5-க்கும் மேற்பட்ட பாம்புகள் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு பக்தா்கள் வழிபட்டு வந்தனா்.

இந்நிலையில், கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தனிநபா் ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. பின்னா், பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கிருந்த புற்றை இடித்து அகற்றியுள்ளாா்.

இத்தகவலை அறிந்து அங்கு சென்ற அப்பகுதி மக்கள், கோயிலை சூழ்ந்து நின்றனா். கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வனத்துறையினருக்கு தகவல் அனுப்பினா். அதன்பேரில், வனத்துறையினா் வந்து பாா்த்தபோது, பொக்லைன் மூலம் இடிக்கப்பட்டதில், அங்கு நாகப் பாம்பு ஒன்று உயிரிழந்தது கிடந்தது தெரிய வந்தது. சில பாம்புகள் வேறு இடம் தேடி சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பாளா் செந்தில் மற்றும் பொக்லைன் ஓட்டுநா் ஜெய்சங்கா் ஆகியோரை வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.