தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில்,  வரும் 12-ஆம் தேதியும், 26-ஆம் தேதியும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:28 pm

DIN

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், வரும் 12-ஆம் தேதி ஆட்சியா் தலைமையிலும், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் வரும் 26-ஆம் தேதியும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கடந்த 21.4.2022 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுரைகளின்படி, இரு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியா் தலைமையிலும் மற்றும் மாதத்துக்கு ஒருமுறை வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, வரும் 12 மற்றும் 26-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு மனுநீதி நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்களின் கோரிக்கைகள், குறைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.