சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 71 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா 

செங்கல்பட்டு  குளுந்தியம்மன் கோயிலில் 71 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா உற்சவ அம்மன் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :19 ஜூலை 2022, 9:16 am

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு  குளுந்தியம்மன் கோயிலில் 71 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா உற்சவ அம்மன் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

செங்கல்பட்டு வ. உ .சி. தெருவில் எழுந்தருளி ஊர்காப்பு அம்மனாக நகரத்தை காத்தருளியும் நாடிவரும்  பக்தர்களின் பிணிகளை தீர்க்கும் அம்மனாக வீற்றிருக்கும் ஸ்ரீ குளுந்தியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி முதல் வாரத்தில் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். 

இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை மும்மலையிலிருந்து ஜலம் திரட்டி வந்து பூஜைகள் நடைபெற்றது. ஆடி மாதம் 2-ம் தேதி திங்கள் கிழமை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் ,மகா தீபாரதனை நடைபெற்றது .

இரவு அம்மனுக்கு பெரும்படையிலிட்டு வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இந்த உற்சவத்தில்  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாரதனை நடைபெற்றது. 

சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப அலங்காரத்தோடு தயார் நிலையில் இருந்த புஷ்ப ரதத்தில் திருவீதி உலா நடைபெற்றது. வானவேடிக்கை, ராஜமேளம், நாதஸ்வரத்துடன் சாமி புறப்பாடு நடைபெற்றது. வீதிகள் தோறும் அம்மனுக்கு வீடுகளின் முன்பு பக்தர்கள் தேங்காய் உடைத்து சாமிக்கு தீப ஆராதனை காட்டி அம்மனை வழிபட்டனர்.

இந்த ஊர்வலம் புதன்கிழமையும் செங்கல்பட்டு நகரம் முழுவதும் வீதி உலா நடைபெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர், பரம்பரை அறங்காவலர்,  அர்ச்சகர் ஜி.நவநீதகிருஷ்ணன் மற்றும் குளுந்தியம்மன் பக்தர்கள் செய்திருந்தனர். இவ்விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.