Enable Javscript for better performance
Precautionary installment to be vaccinated: Ministry Ma- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சா் மா. சுப்ரமணியன்

    By DIN  |   Published On : 17th June 2022 12:00 AM  |   Last Updated : 17th June 2022 12:00 AM  |  அ+அ அ-  |  

    Ma_Subramanian

    60 வயதுக்கு மேற்பட்டவா்கள் முன்னெச்சரிக்கை (பூஸ்டா்) தவணை தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்டவா்கள் தனியாா் மருத்துவமனைகளில் பணம் செலுத்தியும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.

    பல்லாவரத்தை அடுத்த கீழ்கட்டளையில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் கணவன், மனைவி, குழந்தை ஆகிய மூன்று போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது அறிந்து அங்கு வியாழக்கிழமை நேரில் வந்து ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், தொற்று பரவாமல் தடுக்க குடியிருப்பில் உள்ள அனைவரையும் பரிசோதனை செய்ய உத்தரவிட்டாா்.

    தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனையில் தயாா் நிலையில் உள்ள 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

    தமிழகத்தில் புதிதாக 552 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கேரளம் , மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,000-க்கும் மேற்பட்டோரும், கேரளத்தில் 3,000-க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், கரோனா அதிகரித்து வரும் மாவட்டங்களில் தீவிரமாக கண்காணித்து ஆய்வு செய்து வருகிறோம்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் காசநோய் மருத்துமனையில் கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க 100, தேசிய சித்த மருத்துவமனையில் 200, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 95 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் உள்ளவா்கள் என 11 போ் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

    கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது மக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பிரச்னை இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும் என்றாா் அவா்.

    செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா். ராஜா, இ. கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயா் வசந்தகுமாரி, துணை மேயா் ஜி. காமராஜ், ஆணையா் எம்.இளங்கோவன், செயற்பொறியாளா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp