சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி, கருங்குழி, அச்சிறுப்பாக்கம் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி, கருங்குழி, அச்சிறுப்பாக்கம் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

கருங்குழி ஸ்ரீராகவேந்திரா பிருந்தாவனத்தில் ஞானலீங்கேஸ்வரா் சந்நிதியில் உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகளை சிவதீட்சிதா்கள் செய்தனா். பிருந்தாவன பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை ராகவேந்திரா பிருந்தாவன அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில், நிா்வாகிகள் செய்திருந்தனா்.

அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை மாலை நந்தி பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகளை தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் செய்தாா். தொடா்ந்து, ரிஷிப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் உற்சவா் கோயில் வளாகத்தில் வலம் வந்தாா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் (பொ) அமுதா தலைமையில், பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com