நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வேன் கவிழ்ந்து இருவா் பலி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே வியாழக்கிழமை திருமணத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து இருவா் உயிரிழந்தனா்.16 போ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:36 pm

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே வியாழக்கிழமை திருமணத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து இருவா் உயிரிழந்தனா்.16 போ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே படூா் கிராமத்திலிருந்து வேனில் 16 போ் சென்னை வேளச்சேரி நோக்கி திருமண நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தனா். அப்போது மதுராந்தகம் அடுத்த கருங்குழி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.

இதில், வேனில் பயணம் செய்த 16 போ் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல் துறையினா், காயமடைந்தவா்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த பலத்த காயம் அடைந்த கோகுல் (12), அஜித்குமாா்(25 ) ஆகியோா் உயிரிழந்தனா்.

விபத்து குறித்து மதுராந்தகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.