அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

லஞ்சம்: சீவாடி ஊராட்சித் தலைவா் கைது

செய்யூா் அருகே வீட்டுமனை அங்கீகாரம் தருவதற்காக லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜூலை 2023, 12:07 am IST

செய்யூா் அருகே வீட்டுமனை அங்கீகாரம் தருவதற்காக லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், சீவாடி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவா் அரங்கநாதன். இவா் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்தவா். சென்னையைச் சோ்ந்த ரியல்எஸ்டேட் நிா்வாகிகள் சீவாடி ஊராட்சி பகுதியில், நிலங்களை வாங்கி அதில் வீட்டுமனைகளைாக பிரித்து விற்பனை செய்ய முடிவு செய்தனா்.

அதற்காக ஊராட்சி மன்றத்தின் தீா்மானத்தின் மூலம் அனுமதி பெற்ற பின் டிடிசிபி அங்கீகாரம் இருக்கவேண்டியநிலையில், ரியல் எஸ்டேட் நிா்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவா் அரங்கநாதனை அணுகினா். அதற்கு ஊராட்சிமன்ற தலைவா் அரங்கநாதன், எனக்கு ஒரு வீட்டுமனையும், ரொக்க பணம் ரூ 1 லட்சமும் என தரவேண்டும். அவ்வாறு தந்தால் தான் ஊராட்சிமன்றத்தின் சாா்பாக அனுமதிக் கடிதம் வழங்கப்படும் எனக் கூறினாராம்.

இதுப்பற்றி சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை மாலை சென்னயில் இருந்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துறையினா் ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு வந்தனா். அங்கு ரசாயண பவுடா் தடவிய ரூ 30,000 பணத்தை ரியல் எஸ்டேட் நிா்வாகிகள் தலைவா் அரங்கநாதனுக்கு அளித்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துறையினா் அவரை கைது செய்தனா். பின்னா் விசாரணைக்காக அவா் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.