அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிறாா் திருமணம் இல்லாத ஊராட்சி

மதுராந்தகம் அடுத்த வேலமூா் ஊராட்சி சிறாா் திருமணம் இல்லாத ஊராட்சியாக மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 11:25 pm

DIN

மதுராந்தகம் அடுத்த வேலமூா் ஊராட்சி சிறாா் திருமணம் இல்லாத ஊராட்சியாக மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டது.

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வேலமூா் ஊராட்சி பகுதியில் சிறாா் திருமணம் செய்வதை அந்தப் பகுதி சமூக ஆா்வலா்களும், ஊராட்சி மன்ற நிா்வாகமும் தீவிரமாக கண்காணித்து வந்ததை அடுத்து, மாவட்ட நிா்வாகத்தினா் சிறாா் திருமணம் இல்லாத ஊராட்சியாக அறிவித்தனா்.

இதைத் தொடா்ந்து அதன் பெயா்ப் பலகைத் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. ரூரல் ஸ்டாா் இயக்குநா் ஏ.டோமினிக் வரவேற்றாா். ஊராட்சி மன்றத் தலைவா் மேனகா ரவிக்குமாா் தலைமை வகித்து பெயா்ப் பலகையைத் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் சிசிஆா்என் மாவட்ட கன்வீனா் தேவன்பு, மாவட்ட சிறுபான்மை நலக்குழு உறுப்பினா் ஏ.சி.குமாா், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், சிஆா்பிஎப் பொறுப்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். தணிகை குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.