ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

செங்கல்பட்டு: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.8 லட்சத்தில் நல உதவிகள்

செங்கல்பட்டில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.8 லட்சத்தில் நல உதவிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் வழங்கினாா்.

News image

குறைதீா் கூட்டத்தில் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ச. அருண்ராஜ். ~மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ச. அருண் ராஜ்.

Updated On :15 ஜூலை 2024, 9:47 pm

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.8 லட்சத்தில் நல உதவிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 408 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீதுஉரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில், 54 மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாற்றுத்திறனாளி நல அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் 13 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.7.8 லட்சத்தில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)அறிவுடைநம்பி, நோ்முக உதவியாளா்(நிலம்) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வின், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஆா்.பாலாஜி, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வெற்றிகுமாா், உதவி ஆணையா் (கலால்) ராஜன் பாபு, மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Story image