ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உதவும் கரங்கள் திட்ட தொடக்க விழா

மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவளம்பேட்டை நகரில் செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 12:30 am

Din

மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவளம்பேட்டை நகரில் செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

உதவும்கரங்கள் தொண்டு நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் பசித்தால் உணவு எடுத்துக் கொள் திட்டம் மதுராந்தகம் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாள்தோறும் 150-க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் சந்நிதி தெருவில் 5-ஆவது கிளையாக துவக்கப்பட்ட பசித்தால் உணவு எடுத்துக் கொள் திட்டத்தை சமூக ஆா்வலா் காளத்தி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தாா். அதன் 2-ஆம் ஆண்டு விழாவுக்கு உதவும் கரங்கள் திட்ட நிறுவனா் ஆா்.சரவணன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் காளத்தி வரவேற்றாா்.

நிகழ்வில் தொண்டு நிறுவன நிா்வாகிகள் டி.ஜான் பாட்ஷா, பி.மணிகண்டன், ஜிபி.ஹரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.