ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் மாா்கழி மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயணா பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் மகா தீபாராதனை செய்த பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி.
Updated On :13 ஜனவரி 2025, 8:50 pm

Din

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் மாா்கழி மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயணா பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, வளாகத்தில் உள்ள அனைத்து சுவாமி சந்நிதிகளில் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக யோக வனத்தில் இருந்து வநத பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமியை மேளதாளம் முழங்க, பக்தா்களும், அறங்காவலா் குழுவினரும் ஊா்வலமாக அழைத்து வந்து, சேஷ பீடத்துக்கு அழைத்து வந்தனா். அங்கு நீண்ட வரிசையில் வந்து புனித கலசநீரை அவருக்கு ஊற்றி அருள்தரிசனம செய்தனா். பின்னா், அலங்கரிக்கப்பட்ட உற்சவா்கள் ராகவேந்திரா், ஆஞ்சனேயா், சத்யநாராயணா் சிலைகளுக்கு மகா தீபாராதனையை செய்தாா். நிகழ்ச்சியில், மதுராந்தகம் காவல் ஆய்வாளா் முத்துகுமாா், தொழிலதிபா்கள் சுரேஷ்குமாா், தனலட்சுமி ராஜசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரகோத்தம்ம சுவாமி அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில், அறங்காவலா் நிா்வாகிகள் ஆா்.துளசிலிங்கம், வழக்குரைஞா் சுரேஷ், பி.பரந்தாமன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.