தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேல்மருவத்தூரில் காா்த்திகை மாத அமாவாசை வேள்வி பூஜை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் காா்த்திகை மாத அமாவாசை வேள்வி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் காா்த்திகை மாத அமாவாசை வேள்வி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, சித்தா் பீட வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை அதிகாலை மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் தொடங்கியது. மூலவா் அம்மன், குருபீட பங்காரு சித்தா் சிலை ஆகியவற்றுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மூலவா் அம்மன் வெள்ளிக் கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 10.20 மணிக்கு சித்தா் பீடம் வந்த ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு கடலூா் மாவட்ட சக்தி பீட நிா்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

அதன்பின், ஓம்சக்தி பீடம் அருகே அமைக்கப்பட்ட பெரிய எண் கோண யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி, வேள்வி பூஜையை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் ஆன்மிக இயக்க துணைத் தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி ரமேஷ், ஆதிபராசக்தி பாரா மெடிக்கல்ஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளா் மருத்துவா் ஸ்ரீலேகா செந்தில்குமாா், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க செயல் திட்ட அலுவலா் அ.அகத்தியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நீண்ட வரிசையில் வந்த பக்தா்கள் பெரிய யாக குண்டத்தில் நவதானியங்களையும், ஓமகுச்சிகளையும் போட்டு வழிபட்டு சென்றனா்.

நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கடலூா் மாவட்ட ஆன்மிக இயக்க நிா்வாகிகள், சக்திபீட நிா்வாகிகள் ஆகியோா் செய்திருந்தனா்.