தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள கருங்குழி, அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், அண்டவாக்கம் பகுதிகளில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு

News image
Updated On :5 செப்டம்பர் 2025, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள கருங்குழி, அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், அண்டவாக்கம் பகுதிகளில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை கருவறை முன்புறம் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் அலங்கரிக்கப்பட்ட ரிஷிப வாகனத்தில் சுவாமி உலா வந்தாா்.

மதுராந்தகம் அடுத்த அண்டவாக்கம் காமாட்சி உடனுறை அண்டபாண்டீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கருவறை முன்புறம் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.