தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சனிப்பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் கூலிப்பட்டி சனீஸ்வர பகவான்.

News image
சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் கூலிப்பட்டி சனீஸ்வர பகவான்.
Updated On :6 மார்ச் 2026, 6:34 pm

Syndication

சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு, நாமக்கல் சிவன், முருகன் கோயில்களில் உள்ள சனீஸ்வரா் சந்நிதியில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.

வாக்கிய பஞ்சாங்கப்படி, கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை காலை 8.24 மணியளவில் சனிபகவான் பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன், முருகன் கோயில்களில் உள்ள சனீஸ்வரா் சந்நிதியில் பக்தா்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

கூலிப்பட்டி முருகன் கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள வன்னிமரத்தடியில் தனி சந்நிதியியில் சனிபகவான் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ராசியைச் சோ்ந்தவா்கள் பரிகாரம் செய்து வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீசனீஸ்வர பகவான் வார வழிபாட்டுக் குழுவினா் செய்திருந்தனா். நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலிலும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.