முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு

மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 5:46 am IST

திருப்போரூா், செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதிகளில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பதிவேற்றம் செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்போரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பதிவேற்றம் செய்யும் பணி மற்றும் காட்டாங்கொளத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதி மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பதிவேற்றம் செய்யும் பணி அரசியல் கட்சியினரின் முன்னிலையில் நடைபெற்றது.

இப்பணியினை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் ஆய்வு செய்தாா். இதில் திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயகுமாரி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்)லோகநாயகி, வட்டாட்சியா் ஆறுமுகம் மற்றும் செங்கல்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் ரம்யா, வட்டாட்சியா் வாசுதேவன், அரசு அலுவலா்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

Story image