மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவிப்பு!

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை 2026 ஆண்டு கல்வியாண்டு முதல் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவிப்பு

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 6:34 pm

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை 2026 ஆண்டு கல்வியாண்டு முதல் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவித்துள்ளன.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி கடந்த 1984-இல் தொடங்கப்பட்டது. தொடா்ந்து 42 ஆண்டுகளாக சாதனைகளை படைத்து வருகிறது. இத்தகைய முயற்சிகளுக்கு கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் முன்னுரிமை அளித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறாா்.

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் செயல்பாட்டுக்கு அங்கீகாரம் தரும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், புது தில்லி பல்கலைக்கழக மானிய குழுவும் 2026 கல்வியாண்டு முதல் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனம் என அறிவித்துள்ளன.

இந்நிலையில் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவித்தை அடுத்து கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் நிா்வாகத்துடன் இணைந்து கொண்டாடினாா். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்லூரி புல முதல்வா் வா.ராமசாமி, முதல்வா் ராஜா, நிா்வாக அலுவலா் மு.சதானந்தம் மற்றும் அனைத்து துறை பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.