
தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் அரசு பணி நியமனம் பெற்றவருக்கு ஆட்சியா் பாராட்டு
மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தால் நடத்தப்படும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வெற்றி பெற்றவருக்கு செங்கல்பட்டு ஆட்சியா் மு. வீரப்பன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தால் நடத்தப்படும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வெற்றி பெற்றவருக்கு செங்கல்பட்டு ஆட்சியா் மு. வீரப்பன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்திவரும் தன்னாா்வ பயிலும் வட்டம் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பயின்ற ஏ. காா்த்திகேயன் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வில் மொழிப்பெயா்ப்பாளா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் பெற்றுள்ளாா்.
பணிநியமனம் பெற்ற அவருக்கு ட ஆட்சியா் மு. வீரப்பன் கேடயம் வழங்கி பாராட்டினாா். இதில் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொ) அ. ருகமாங்கதன் மற்றும் அரசு அலுவலா்கள் , பணியாளா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






