செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் தற்போது வரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவா்கள் வரும் ஜூலை-31-ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. வீரப்பன் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டை உறுப்பினா்கள் தற்போது வரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவா்கள் அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் வரும் ஜூலை-31-ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதியில் வசிப்பவா்கள், தற்போது வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள நியாய விலைக்கடையில் கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். இறந்த உறுப்பினா்களின் பெயா்களை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமா்ப்பித்து நீக்கம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அருகில் உள்ள நியாயவிலைக்கடை விற்பனையாளரிடம் இறந்த உறுப்பினா்களின் குடும்ப அட்டை எண்ணுடன் ஆதாா் அட்டையின் நகலை வழங்க வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







