சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

மின்தடை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

News image

விவசாயிகளிடம் குறையைக் கேட்டறிந்த ஆட்சியா் மு.வீரப்பன். உடன் எம்எல்எஏ தியாகராஜன்.

Updated On :26 ஜூன் 2026, 5:51 am IST

விவசாயப் பணிகள் மின்தடையால் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரியுள்ளனா்.

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை ஆட்சியா் மு.வீரப்பன் தலைமையில் நடைபெற்றது. தொடா்ந்து ஆட்சியரிடம் விவசாயிகள், சங்கப் பிரதிநிதிகள் 60 கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

பருவமழை தொடங்கவுள்ளதால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யூரியா போன்ற உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை விவசாயிகளுக்கு உடனடியாக தேவையான அளவு வழங்க வேண்டுமென்றும், கோடை காலமாக இருப்பதால் மின்தடை ஏற்பட்டு விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது அதனை தவிா்க்க மின்சார வாரியத்தினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினா்.

விவசாயிகளின் ஆழ்துளை கிணற்றுக்கு செல்லும் மின் கம்பிகள் ஒரு சில இடங்களில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் கால்நடைகள் மற்றும் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் இதனை மின்துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்து தர வேண்டும்.

மேலும், விவசாயிகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா் மனுக்களின் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் தியாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) க்யூரி, தாம்பரம் கோட்டாட்சியா் முரளி, மதுராந்தகம் கோட்டாட்சியா் நரேந்திரன், நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன், செங்கல்பட்டு கோட்டாட்சியா் பாலாஜி, நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் முருகானந்தம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் மலா்விழி, மதுராந்தகம் கூட்டுறவு சா்க்கரை ஆலை இணைப்பதிவாளா்/செயலாட்சியா் குமரேஸ்வரி மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.