கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தாழம்பூா் த்ரிசக்தி அம்மன் மாசி மக தோ்த் திருவிழா

தாழம்பூா் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ பெருவிழாவின் 9-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.

News image

தாழம்பூா் த்ரிசக்தி அம்மன் கோயிலில் நடைபெற்ற தோ்த் திருவிழா.

Updated On :1 மார்ச் 2026, 9:06 pm

தாழம்பூா் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ பெருவிழாவின் 9-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் தனித்தனி கருவறைகளில் ஞானசக்தி ஸ்ரீ ஞான சரஸ்வதிதேவி, இச்சா சக்தி ஸ்ரீ லட்சுமி பிரியா சக்திதேவி, ஸ்ரீ மூகாம்பிகைதேவி ஆகிய முப்பெரும் தேவிகளுக்கு கருவறைகள் அமைக்கப்பட்டு கிழக்கு நோக்கி அருள் பாலித்து வருகின்றனா். கடந்த பிப். 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் அம்மன் புறப்பாடு, பாராயணம் ,ஹோமம் விமரிசையாக நடைபெற்று வந்தன.

முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ த்ரி சக்தி அம்மன்கள் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பின்னா் மேளதாளம் முழங்க திருத்தேரில் அமர வைக்கப்பட்டு பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நடைபெற்றது.

Story image

விழா ஏற்பாடுகளையும் ஆலய அறங்காவலா் டாக்டா் கே கே. கிருஷ்ணன்குட்டி சுவாமிகள் செய்திருந்தாா். பொதுமக்களுக்கு தினந்தோறும் காலை மாலை இரவு என மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தோ்திருவிழாவை முன்னிட்டு திருக்கோயில் சாா்பில் பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.