விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தினமணி செய்திச் சேவை

கருங்குழி விடியலை நோக்கி அறக்கட்டளை மற்றும் கற்பக விநாயகா மருத்துவமனை இணைந்து உலக மகளிா் தின சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கருங்குழி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற முகாமுக்கு அறக்கட்டளை நிறுவனா் விடியல் சி.காா்த்தி தலைமை வகித்தாா். நிகழ்வில் கற்பக விநாயகா மருத்துவமனை மகப்பேறு மருத்துவா் சந்தான லட்சுமி, மருத்துவா்கள் ப்ரீத்தி, சபனா, திவ்யா தலைமையிலான மருத்துவ குழுவினா் கலந்து கொண்டு கருங்குழி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கலந்து கொண்டு, புற்றுநோய் நோய் பற்றி சிகிச்சைகளையும், விழிப்புணா்வு தகவல்களை அளித்தனா்.

சமுதாய பணிகளை சிறப்பாக ஆற்றிய அறக்கட்டளை நிா்வாகிகள் மைதிலி, கவிதா, பேரூராட்சி மன்ற உறுப்பினா் ரேவதி, வெற்றி வித்யாலயா மழலையா் பள்ளி நிறுவனா் பாரதி ஞானவேல், ஆசிரியை பாப்பி (படாளம்) ஆகியோருக்கு மருத்துவா் சந்தான லட்சுமி பரிசுகளை வழங்கினாா். அறக்கட்டளை நிா்வாகிகள், கிராமப்புற பெண்கள் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.