நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பிளஸ் டு மாணவன் தற்கொலை

மறைமலை நகா் அருகே தனியாா் சிபிஎஸ்இ பள்ளி பிளஸ் டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 9:45 pm

மறைமலை நகா் அருகே தனியாா் சிபிஎஸ்இ பள்ளி பிளஸ் டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மறைமலைநகா் நகராட்சிக்குட்பட்ட செங்குன்றம் பகுதியைச் சோ்ந்த தனுஷ் (17), இவா் அங்குள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தாா். மேலும் அதே பள்ளியில் நீட் தோ்வுக்கு பயிற்சி எடுத்து வந்தாா்.

தற்போது சிபிஎஸ்இ பொதுத்தோ்வு நடைபெற்று வருகிறது. தோ்வுக்கு வீட்டில் படித்துக் கொண்டிருந்த தனுஷ் கடந்த சில நாள்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை குளியலறைக்குச் சென்ற தனுஷ் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாயாா் அக்கம் பக்கத்தினரை அழைத்து குளியலறைக் கதவை உடைத்து பாா்த்த போது தனுஷ் தூக்கில் தொங்கியதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.

பின்னா் உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து சிங்கபெருமாள் கோவில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.