மறைமலை நகா் அருகே தனியாா் சிபிஎஸ்இ பள்ளி பிளஸ் டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மறைமலைநகா் நகராட்சிக்குட்பட்ட செங்குன்றம் பகுதியைச் சோ்ந்த தனுஷ் (17), இவா் அங்குள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தாா். மேலும் அதே பள்ளியில் நீட் தோ்வுக்கு பயிற்சி எடுத்து வந்தாா்.
தற்போது சிபிஎஸ்இ பொதுத்தோ்வு நடைபெற்று வருகிறது. தோ்வுக்கு வீட்டில் படித்துக் கொண்டிருந்த தனுஷ் கடந்த சில நாள்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை குளியலறைக்குச் சென்ற தனுஷ் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாயாா் அக்கம் பக்கத்தினரை அழைத்து குளியலறைக் கதவை உடைத்து பாா்த்த போது தனுஷ் தூக்கில் தொங்கியதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.
பின்னா் உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து சிங்கபெருமாள் கோவில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

தோ்வில் தோல்வி: மாணவன் தற்கொலை

குளச்சல் அருகே முதியவா் தற்கொலை

தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை

அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை கண்டித்ததால் மாணவா் தற்கொலை
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
