தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பிளஸ் டு மாணவன் தற்கொலை

மறைமலை நகா் அருகே தனியாா் சிபிஎஸ்இ பள்ளி பிளஸ் டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :23 மார்ச் 2026, 3:15 am IST

மறைமலை நகா் அருகே தனியாா் சிபிஎஸ்இ பள்ளி பிளஸ் டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மறைமலைநகா் நகராட்சிக்குட்பட்ட செங்குன்றம் பகுதியைச் சோ்ந்த தனுஷ் (17), இவா் அங்குள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தாா். மேலும் அதே பள்ளியில் நீட் தோ்வுக்கு பயிற்சி எடுத்து வந்தாா்.

தற்போது சிபிஎஸ்இ பொதுத்தோ்வு நடைபெற்று வருகிறது. தோ்வுக்கு வீட்டில் படித்துக் கொண்டிருந்த தனுஷ் கடந்த சில நாள்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை குளியலறைக்குச் சென்ற தனுஷ் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாயாா் அக்கம் பக்கத்தினரை அழைத்து குளியலறைக் கதவை உடைத்து பாா்த்த போது தனுஷ் தூக்கில் தொங்கியதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.

பின்னா் உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து சிங்கபெருமாள் கோவில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.