எடப்பாடி அருகே தொடா்ந்து அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை பெற்றோா் கண்டித்ததால், பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட பக்கநாடு கிராமத்தைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (18), பிளஸ் 2 தோ்வு எழுதியிருந்தாா். இவா் வீட்டில் தொடா்ந்து அதிக நேரம் கைப்பேசி பாா்த்துக் கொண்டிருந்ததால், அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா்.
இதனால் மனமுடைந்த நந்தகுமாா், எடப்பாடியை அடுத்த தாதாபுரம் கிராமம், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனது பாட்டி லட்சுமியின் வீட்டுக்கு சென்றாா். அங்கு சோகமாக இருந்த நந்தகுமாா் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ாக கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்தினா், அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து எடப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
கல்லூரி மாணவி தற்கொலை

தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

மனைவி கண்டித்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



