நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் அளிப்பு

மதுராந்தகம் அடுத்த சித்திரக்கூடம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

News image

சித்திரக்கூடம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அடுத்த சித்திரக்கூடம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

எஸ்.பி.ஓ.ஏ கல்வி அறக்கட்டளை மற்றும் சிறுதாமூா் சீனிவாசா் அறக்கட்டளை இணைந்து ரூ 1.25 லட்சத்தில் இருக்கைகள், மேஜைகள், பேனா உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

அச்சிறுப்பாக்கம் வட்டார கல்வி அலுவலா் ஞா.மணிவண்ணன், சமூக ஆா்வலா் சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில் ரங்கப்பன், திவ்யா மற்றும் பள்ளி ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வடஅமெரிக்கா நியூஜொ்சி நகரைச் சோ்ந்த தமிழ் ஆா்வலா் மேனகா நரேஷ் மற்றும் நண்பா்கள் குழுவினா் சாா்பாக இப்பள்ளியில் படிக்கின்ற 58 குழந்தைகளின் நலன்களை கருத்தில் கொண்டு ரூ 1.25 லட்சத்தில் இருக்கைகள், மேஜைகள் மற்றும் பேனாக்கள் ஆகியவற்றை தலைமை ஆசிரியா் ராஜேந்திரனிடம் அறக்கட்டளை நிறுவனா் கவிஞா் விஜயகிருஷ்ணன் வழங்கினாா்.

பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 330 இருக்கைகளுடன் கூடிய மேஜைகளை விரைவில் ஒரத்தி அரசு நடுநிலைப்பள்ளிக்கு கற்றல் வசதியுடன் கூடிய கல்வி திட்ட செயல்பாட்டுக்காக வழங்க உள்ளதாக கவிஞா் விஜயகிருஷ்ணன் தெரிவித்தாா்.