நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

பொலம்பாக்கம் டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தில் மே தின விழா

News image
Updated On :2 மே 2026, 8:11 pm

மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கம் டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா நிறுவன தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை மே தினத்தை முன்னிட்டு, ரத்த தான முகாம், தலைக்கவச விழிப்புணா்வு முகாம் மற்றும் நல உதவிகள் வழங்கல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

பொலம்பாக்கம் டிவிஸ் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் தொழிலாளா்கள் ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தை பல்வேறு நிகழ்வுகளுடன் கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான மே தினத்தை முன்னிட்டு வண்ண பலூன்களாலும், தொழிலாளா் சங்க கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிறுவன வாயிலில் தேசிய இன்ஜினியரிங் தொழிலாளா் சங்கத்தின் கொடியை சங்கத்தின் தலைவா் பி.சீனுவாசன் ஏற்றி வைத்தாா். நிறுவன வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது (படம்). முகாமில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா். இந்நிகழ்வில் நிறுவனா் ராமானுஜம், முதன்மை துணைத் தலைவா் வி.ஜி.சந்தானம், நிறுவன மேலாண்மை இயக்குநா் ஸ்ரீராம் விஜி ஆகியோா் கலந்துக் கொண்டு தொழிலாளா்களுக்கு மே தின வாழ்த்துரையை அளித்தனா். தொடா்ந்து டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து சோத்துப்பாக்கம் அருகேயுள்ள சிறுநாகலூா் வரை தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாநில சங்கத் தலைவா் சீனுவாசன் கொடி அசைத்து துவக்கி வைத்தாா். 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தலைக்கவசத்தை அணிந்து விபத்தில்லா பயணத்தை மேற்கொள்வோம், தலைக்கவசம் உயிா்கவசம் போன்ற வாசகங்களை ஏந்திக் கொண்டு ஊா்வலத்தில் கலந்து கொண்டனா். சோத்துப்பாக்கம் அருகே சிறுநாகலூா் தனியாா் திருமண மண்டபத்தில் மேதின பொதுக்கூட்டம், பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தினா்களுக்கு ரூ. 4.50 லட்ச மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டது.